மாணவர்களை வாக்காளராக சேர்க்க கல்லூரிகளிலேயே விண்ணப்ப படிவம்
ஆண்டுதோறும் ஜனவரி முதல் தேதியை கணக்கில் கொண்டு 18 வயதானவர்களை புதிய வாக்காளர் களை பட்டியலில் சேர்க்கும் பணியை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. பல இடங்களில் 18 வயதான புதிய வாக்காளர்கள் பலர், கல்லூரி படிப்புக்கு செல்லும் போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வம் காட்டுவதில்லை.
இதனால் புதிய வாக்காளர்கள் சேர்க்கையில் தொய்வு ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு மேற்படிப் புக்கு வெளியூரில் கல்வி நிறுவனங்களில் தங்கி பயிலும் மாணவர்களை சேர்க்கவும், கல்லூரியில் படிப்பவர்களிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கல்லூரிகளிலேயே விண்ணப்பிக்கும் நடைமுறை அமல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பிரிவு மூலம் கல்லூரி முதல்வர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம்(6) ஒப்படைக்கப்படும். இந்த படிவத்தை மாணவர்கள் பூர்த்தி செய்து கல்லூரி முதல்வர் மூலம் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக் கலாம். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பிரிவு அதிகாரிகள், இந்த விண்ணப்பங்களை ஆய்வு முறைப்படி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுப்பர்.
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 21 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட அளவில் 18 வயது பூர்த்தியான 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. இதில் பெரும்பாலானோர் கல்லூரிகளில் படித்து வருபவர்கள். தற்போது இவர்களை பட்டியலில் சேர்ப்பதற்கு கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிவம் 6 வினியோகிக்க தேர்தல் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.