‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது மோதல் - அடிதடி
லத்திகா என்ற படத்தில் நடித்த பவர்ஸ்டார் சீனிவாசன் சிவகாசி கோர்ட்டில் ஆஜரானபோது மோதல் ஏற்பட்டு அடிதடி ஆனது.
தாஸ் என்பவரிடம் 9 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்ததாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது வழக்கு உள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு சீனிவாசன் ஆஜராக வந்தபோது கோர்ட் வளாகத்தில் மோதல் உண்டானது.
சீனிவாசனின் ஆதரவாளர்களூம், தாஸ் என்பவரின் ஆட்களும் மோதிக்கொண்டனர். இரு தரப்பைச் சேர்ந்தவர்களையும் பிடித்து சிவகாசி போலீஸ் விசாரணை செய்துவருகிறது.