வரிச்சியூர் செல்வம் ஜாமீன் மனு தள்ளுபடி
தி.மு.க., ஒன்றிய செயலாளர் கடத்தப்பட்ட வழக்கில், வரிச்சியூர் செல்வத்தின் ஜாமின் மனுவை, முதன்மை செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது.
ராமநாதபுரம், போகலூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் கதிரவன். மதுரை ரிங்ரோடு அருகே காரில் வந்த அவரை, ரூ.2 கோடி கேட்டு, ஐந்து பேர் கும்பல் கடத்தியது.
ரித்திஷ் எம்.பி., யிடம் பேசினால் விடுவிப்பதாக,மிரட்டியது. கதிரவன், ரித்திஷிடம் பேசிய பின், அவரை விட்டு கும்பல் தப்பியது. சிலைமான் போலீசில் கதிரவன் புகார் செய்தார்.
போலீசார் தேடுதல் வேட்டையில், கடத்தலில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த சினோஜ், சுட்டு க்கொல்லப்பட்டார். வரிச்சியூர் செல்வம் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். செல்வம் தம்பி செந்தில் கோர்ட்டில் சரண் அடைந்தார். விசாரணையில் இருந்த ரித்திஷ் எம்.பி., சமீபத்தில் ஜாமின் பெற்றார்.
இந்நிலையில், ஜாமினில் விடுவிக்ககோரி, முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் வரிச்சியூர் செல்வம் மனு செய்தார். அதை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) சரவணன், மனுவை தள்ளுபடி செய்தார்.