டாக்டர்கள் கைவிரிப்பு : பிரசவம் பார்த்து சக்சஸ் செய்த 108 டிரைவர் ( படங்கள் )
கடந்த 25ம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பெரியநாயகி புரத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி மனைவி மைதிலி (26)க்கு கடும் பிரசவ வலி. முத்துப்பேட்டை 108 மூலமாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு போனார். மைதிலியை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை இடம்மாறி உள்ளது. மிக கஷ்டம். இரட்டை குழந்தை என்பதால் மிக மிக கஷ்டம். உடனே திருவாரூர் கொண்டு போங்க என்று கூறிவிட்டார்.
திருவாரூர் செல்லும் வழியில் மாவூரில் மைதிலியின் நிலைமை படுமோசமானது. ஆபத்துக்கு பாவம் இல்லை என்று 108 ஆம்புலன்ஸின் டிரைவர் சேகர் மற்றும் மருத்துவ உதவியாளர் சுந்தர்ராஜன் இருவரும் பிரசவம் பார்த்தனர். பிரசவம் சக்ஸஸ் ஆச்சு. மைதிலிக்கு இரட்டை குழந்தை பிறந்தது.