2வது மனைவியை அடித்துக் கொலை செய்த மூன்றாவது கணவன் கைது! சென்னையில் பரபரப்பு!
சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்லு (வயது 32). இவரது முதல் கணவர் மகேஷ் இவரோடு இல்லை. இரண்டாவது கணவர் ரமேஷ். இவரும் அம்லுவோடு இல்லை. மூன்றாவது கணவன் சசிகுமார் மட்டும் குடியும் குடித்தனமும்மாக தினமும் சண்டை போட்டுக்கொண்டு அம்லுவோடு குடும்பம் நடத்தி வந்தாராம். இதில் சசிகுமாருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (24.05.2012) இரவு அம்லுவுக்கும் சசிகுமாருக்கும் திடீரென வாய்தகராற ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் அதிக மதுபோதையில் இருந்த சசிகுமாரின் குத்து பலமாக இருந்தது. இதில் மூக்கு உடைந்து தலையில் காயமும் ஏற்பட்டு அம்லு கீழே விழுந்தார்.
சசிகுமார் போதையில் வெளியே சென்றுவிட்டார். இன்று (25.05.2012) காலை சசிகுமார் வீட்டுக்கு வந்தார். வீட்டு வாசலில் போலீசார் நின்றிருந்தனர். அதன்பின்னர்தான் அவருக்கே விபரம் தெரிந்தது. அதிக குத்து விட்ட காரணத்தால் கொலைக்காரனாகி போன சசிகுமாரை மயிலாப்பூர் போலீசார் கைது செய்தனர்.