மெக்சிகோ பெண் கொலை: மார்ட்டினுக்கு ஜாமின் மறுப்பு
மதுரை, திருநகர் அருகே, மெக்சிகோவை சேர்ந்த செசில்லா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான, மார்ட்டின் மான்ட்ரிக் தாக்கல் செய்த ஜாமின் மனுவை, முதன்மை செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன் கோயில் போலீஸ் ஸ்டேஷனில் மார்ட்டின் மான்ட்ரிக், "என் ஒப்பந்த மனைவி, செசில்லா அகஸ்டாவை காணவில்லை' என, புகார் செய்தார். இந்நிலையில், திருநகர் அருகே, செசில்லா கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், செசில்லாவை, மார்ட்டின் கொலை செய்தது தெரிந்தது. போலீசார் அவரை, கைது செய்தனர். அவர்களது குழந்தை அடில்லா, ஆதரவற்ற நிலையில், தொண்டு நிறுவன பராமரிப்பில் வைக்கப்பட்டார். பின், மெக்சிகோவிலிருந்து வந்த உறவினர்களுடன், அடில்லா சென்றார். இந்நிலையில், ஜாமின் கோரி, கோர்ட்டில் மார்ட்டின் மனு செய்தார். அவரை ஜாமினில் விட அரசு வழக்கறிஞர் தமிழ்செல்வன் ஆட்சேபம் தெரிவித்தார். அதை ஏற்று, ஜாமின் மனுவை, நீதிபதி(பொறுப்பு) சரவணன் தள்ளுபடி செய்தார்