திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை!
திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்துர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். திண்டுக்கல் அசோக்நகரில் உள்ள ஐ.பெரியசாமி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று (18.05.2012) காலை சோதனை நடத்தினர். வத்தலக்குண்டு அருகே ஐ.பெரியசாமிக்கு சொந்தமான நூற்பாலை, திண்டுக்கல் பாண்டிநகரில் உள்ள பெரியசாமி மகன் செந்தில் வீடு, ரவுண்ட் ரோட்டில் உள்ள பெரியசாமி மகள் இந்திரா வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
ஐ.பெரியசாமி வீடு உள்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக்திவேல்