பாராளுமன்ற நடவடிக்கைக்கு இடையூறு செய்வது அந்த காலத்தில் கிடையாது! 92 வயதான எம்பி வருத்தம்!
பாராளுமன்றத்தின் 60-வது ஆண்டு விழாவில் முதல் மற்றும் 3-வது பாராளுமன்றத்தில் உறுப்பினராகவும், தற்போது டெல்லி மேல்-சபை உறுப்பினராகவும் இருந்து வருகிற 92 வயது ரெய்ஷாங் கெய்ஷிங் கவுரவிக்கப்பட்டார்.
அப்போது அவர் பேசுகையில், "சபையின் மையப்பகுதிக்கு சென்று அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்வது அந்த காலத்தில் கிடையாது. கேள்வி நேரத்தின் புனிதத்தன்மை காக்கப்பட்டது. அப்போது விவாதங்கள் சிறப்பாக நடந்தன. 60 ஆண்டு கால பயணத்தில் பாராளுமன்ற நடவடிக்கைகளின் தரம் குறைந்திருக்கிறது. உறுப்பினர்கள் அவை நடவடிக்கையில் குந்தகம் விளைவிக்கக்கூடாது, நேரத்தையும் வீணடிக்கக்கூடாது'' என கேட்டுக்கொண்டார்.