மக்கள் நலப்பணியாளர் விஷம் குடிப்பு
நாகையில் விஷம் குடித்த மக்கள் நலப்பணியாளர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகை சிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவருக்கு வயது 45. இவர் மக்கள் நலப்பணியாளராக இருந்தார். தற்போது வேலையில்லாததால் விரக்தி அடைந்து ஞாயிற்றுக்கிழமை (13.05.2012) மாலை பூச்சி மருந்தை குடித்தார்.
இதையறிந்த அக்கம் பக்கத்தின்ர் அவரை உடனடியாக நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.