நித்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - மதுரை ஆதின மடத்தின் முன் பதட்டம்
மதுரை ஆதினமாக நித்தியானந்தா நீடிக்க கூடாது என்று மதுரை ஆதின மீட்புக்குழு கோரிக்கை விடுத்திருந்தது. நித்திக்கு எதிராக மதுரை மேலமாசி வீதியில் ஆதின மீட்புக்குழுவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் மாலை 5 மணிக்கு ஆதினத்தின் உள்ளே நுழைந்து வழிபாடு நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளதால், ஆதினத்தின் இரண்டு வழிகளையும் அடைக்கப்பட்டுள்ளது. வெளியூரிலிருந்து வரும் நித்தியானந்தாவின் சீடர்கள் மட்டும் ஆதினத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். போராட்டத்தையடுத்து மதுரை ஆதினம் முன்பு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.