தமிழக போலீஸ் டி.ஐ.ஜி.க்கள் 6 பேர் லண்டன் பயணம்
மத்திய அரசு ஏற்பாட்டின்பேரில், ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு நிர்வாக மேலாண்மை தொடர்பாக 8 வார காலம் விசேஷ பயிற்சி கொடுக்கப்படுகிறது.
இந்த முறை இந்தியா முழுவதும் இருந்து 223 ஐ.பி.எஸ். அதிகாரிகள் செல்கின்றனர். தமிழகத்திலிருந்து 6 டி.ஐ.ஜி.க்கள் பயிற்சிக்காக செல்ல மத்திய அரசும், தமிழக அரசும் அனுமதி வழங்கி உள்ளது. இந்த மாதம் 14-ந் தேதி இவர்கள் பயிற்சிக்காக புறப்பட்டு செல்கிறார்கள்.