ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றயை 48வது லீக் ஆட்டம் மொகாலியில் நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் அணியும் மோதின. டாஸ்வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து 177 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.