மாட்டு தீவன ஊழல்:34 பேருக்கு சிறை
கடந்த 1990ம் ஆண்டில் மாட்டு தீவன ஊழல் தொடர்பாக இன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில், 34 பேரை குற்றவாளி என அறிவித்துள்ளது.
அவர்கள் முறைகேடாக தொராண்டா கருவூலத்தில் இருந்து ரூ.6.6 கோடி பெற்றதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு ஒரு வருடம் முதல் 6 வருடங்கள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை அபராதமும் விதித்து நீதிபதி டி.சி. ராய் தீர்ப்பளித்தார்.