மாநில அரசுகள் ஒத்துழைப்பு தரவேண்டும்: பிரதமர்
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பாக அனைத்து மாநில முதலவர்கள் மாநாடு இன்று (05.05.2012) காலை தொடங்கியது.
மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது, இந்த தேசிய தீவிரவாத தடுப்பு மையம், மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையாக அமையும். நமது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் தீவிரவாதத் தாக்குதலிலிருந்து மக்களைப் பாதுகாக்கவுமே இந்தத் தேசிய தீவிரவாதத் தடுப்பு மையம் அமைக்கப்படுகிறது. இதற்கு அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.