எம்.பி. பங்களாவில்துப்பாக்கி முனையில் இளம்பெண் கற்பழிப்பு
உத்திரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவராகவும் எம்.பி.யாகவும் உள்ள ஒருவரின் பங்களாவில் வேலையாளாக இருப்பவன் ராஜு. இவன் கடந்த 28-ந் தேதி (சனிக்கிழமை) இரவு திருமண விழாவிற்கு சென்றுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த 16 வயது இளம்பெண்ணை துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி வாயைப் பொத்தி எம்.பி.யின் பங்காளவுக்குள் தூக்கி சென்றான்.
அங்கு அந்த இளம்பெண்ணை ராஜீ பலவந்தமாக கற்பழித்தான். இந்த சம்பவம் குறித்து இளம் பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் எம்.பி.யின் வேலைக்காரன் ராஜு கைது செய்யப்பட்டான். பாதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவபரிசோதனைக்கு அனுப்பபட்டாள். பங்களாவில் எம்.பி. இல்லாத நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.