தமிழ் ஈழம் அமைவதே திமுகவின் விருப்பம்: பேராசிரியர் க.அன்பழகன்
இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதே திமுகவின் விருப்பம் என்று திமுக பொதுச்செயலாளர் பேராசியர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
திராவிட இயக்க்ததின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை அம்பத்தூரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக பொதுச்செயலாளர் பேராசியர் க.அன்பழகன்,நாட்டு மக்கள் சமஉரிமை பெற்று வாழ வழிவகுத்த இயக்கம், திராவிட இயக்கம். திராவிட இயக்கம் கொள்கை மற்றும் இலட்சியங்களை திமுக தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இலங்கையில் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதே திமுகவின் விருப்பம். திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடக்கும் டெசோ கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
உடனடியாக உத்தரவு போடும் இடத்தில் நாம் இல்லை. நமது வேண்டுகோளை இலங்கை அரசு மதிப்பாக இல்லை. இந்திய அரசு நமக்கு அனுதாபம் காட்டுகிறது. அந்த அனுதாபத்தை பயன்படுத்தி, எந்த அளவுக்கு நம்முடைய ஈழத் தமிழர்களை காப்பற்றலாமோ,. பாதுகாக்க வழி செய்யலாமோ அதை செய்ய வேண்ம் என்பதுதான் எங்களுடைய குறிக்கோளாக நோக்கமாக இருக்கிறது என்றார்.