’மிடாஸ்’ மோகனுக்கு நிபந்தனை ஜாமீன்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரப்பகுதி வி.ஏ.ஓ. அன்பழகன். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், திவாகரன் (சசிகலாவின் தம்பி), `மிடாஸ்' மோகன் ஆகியோர் மன்னார்குடியில் உள்ள மதுக்கூர் சாலை அருகே, ரியல் எஸ்டேட் அடிப்படையில் குடியிருப்பு மனைகளை அமைத்து புதிய நகர் ஒன்றைத் தொடங்கினர்.
இதனடிப்படையில் திவாகரன், மிடாஸ் மோகன் மற்றும் 10 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் திவாகரன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திவாகரனுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். மிடாஸ் மோகனும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கும் நிபந்தனை ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை சைதாப்பேட்டை 9-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 4 வாரங்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.