டி.எஸ்.பி. மீது இன்ஸ்பெக்டர் பரபரப்பு புகார்
சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ஆரோக்கியதாஸ். போலீஸ் இன்ஸ் பெக்டரான இவர் எழும்பூர் போலீஸ் நிலையத்தில் பணி செய்த போது 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார். இவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி. பொன்னுசாமி மீது சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு மனுவில், ‘’கடந்த 1994-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் பொன்னுசாமி. தற்போது டி.எஸ்.பி. ஆக உள்ளார். அவர் தன்னுடைய பெயரிலும், மனைவி பெயரி லும் பல்வேறு முறைகேடு களை செய்துள்ளார்.