பொள்ளாச்சி: பொதுமக்கள் சாலைமறியல்
பொள்ளாச்சி அருகே குடிநீர் கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே ஜமீன்புதூரில் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறதாம். இதைக் கண்டித்து பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் 3 சாலை சந்திப்பில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுளளனர். இதனால் பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை, திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.