கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா துவங்கியது
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் 18 நாள் சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டு திருவிழா, நேற்று மாலை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதில் கூவாகம் உள்பட 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூழ் குடங்களை சுமந்து வந்து கூத்தாண்டவர் கோயில் அருகில் உள்ள மாரியம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர்.