<a href='http://adex.adchakra.net/adex/www/delivery/ck.php?n=aae31074&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' xhref='http://adex.adchakra.net/adex/www/delivery/ck.php?n=aae31074&cb=INSERT_RANDOM_NUMBER_HERE'target='_blank'><img src='http://adex.adchakra.net/adex/www/delivery/avw.php?zoneid=501&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=aae31074&ct0=INSERT_CLICKURL_HERE'border='0' alt='' /></a>கொலம்பியா முன்னாள் மந்திரி திடீர் விலகல்
உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் ஆதரவுடன் ஜிம் யாங் கிம் மற்றும் கொலம்பியா முன்னாள் நிதி மந்திரி ஜோஸ் அந்தோணியோ, நைஜீரியா நிதி மந்திரி ஒகோன்ஜோ இவெலா ஆகிய 3 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தனர். தற்போது திடீர் திருப்பமாக கொலம்பியா முன்னாள் நிதி மந்திரி ஜோஸ் அந்தோணியோ போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். என்னுடைய நாடே எனக்கு ஆதரவு கொடுக்காமல் தனித்து விடப்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.
எனவே மற்ற இருவர் இடையே தான் போட்டி நிலவுகிறது. என்றாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷியா ஆதரவு இருப்பதால் ஜிம் யாங் கிம் உலக வங்கி தலைவர் பதவிக்கு தேர்வு பெறுவது உறுதி என கூறப்படுகிறது.