தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழலை ஒழிக்கலாம்: ஏ.பி.பரதன்
வலுவான லோக்பால் மற்றும் தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழலை ஒழிக்க முடியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் ஏ.பி. பரதன் குறிப்பிட்டார்.
தொழில் நிறுவனங்களுக்கும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கும் இடையிலான உறவைத் துண்டிப்பதன் மூலம் ஊழலை ஒழிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஊழலை ஒழிப்பதில் ஒத்த சிந்தனை உடைய மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் சட்டம் உருவாக வழியேற்படுத்த வேண்டும். இந்த சட்டத்தில் பிரதமர் உள்ளிட்ட அனைவரும் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆந்திர மாநிலத்தில் தெலங்கானா பிராந்தியத்துக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்த முயன்றவர் சந்திர ராஜேஷ்வர் ராவ் என்று குறிப்பிட்டார். நிஜாம் மாவட்டத்தில் ஆயுதமேந்தி போராடியவர் என்றும் சுட்டிக்காட்டினார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ராஜேஷ்வர் ராவின் பங்களிப்பு அளப்பரியது என்று நினைவுகூர்ந்தார் கட்சியின் புதிய பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி.