பாக்., சிறையிலிருந்து 26 இந்தியர்கள் விடுவிப்பு இந்திய மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது எல்லை தாண்டியதாக பாகிஸ்தானில் சிறைவைக்கப்பட்டனர். இவர்களில் 26 இந்தியர்களை பாகிஸ்தான் விடுவித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் அதிகாரிகள் இந்த மீனவர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து வழியனுப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி இந்தியாவுக்கு ஒரு நாள் பயணமாக வந்தபோது பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பிறகு 26 மீனவர்கள் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.