காவிரி நதிநீர் தீர்ப்பாயத் தலைவர் ராஜினாமா
காவிரி நதிநீர் பிரச்சனை தீர்ப்பாயத் தலைவர் பொறுப்பில் இருந்து என்.பி.சிங் ராஜினாமா செய்துள்ளார். தன் உடல் நிலை காரணத்தால் இந்தப் பதவியை ராஜினாமா செய்வதாக புதன்கிழமை (11.04.2012) அவர் தெரிவித்துள்ளார். என்.பி.சிங் சுமார் 16 ஆண்டுகள் இந்தத் தீர்ப்பாயத்தில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.