சர்க்கரை ஆலை பணியாளர்கள் போராட்டம்
சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து சர்க்கரை ஆலை பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர். அதன்படி ஏப்ரல் 16ல் சர்க்கரை ஆலை உள்ள மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 24ல் தலைமை செயலகம் முன் 6000 பணியாளர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.