மதுரை மாநகராட்சிக்கு விஜயகாந்த் பதில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது என்று தமிழக அரசு கடந்த 1997-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை மீறி ஏராளமான கட்டிடங்கள் அதிக உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளன. எனவே விதி மீறிய கட்டிடங்களை இடிக்க கலெக்டர் சகாயம் மாநகராட்சிக்கு உத்தரவிட்டார். அதன்படி மதுரை மாநகராட்சி அதிகாரிகள் விதியை மீறிய 790 கட்டிடங்களை இடிக்க நோட்டீசு வழங்கி வருகின்றனர்.