தமிழக முதல்வர் படம் கிழிப்பு : 5 பேரை தேடும் போலீசார்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவியில் அ.தி.மு.க.,சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் வெயில் தாக்கத்தால் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் குடிநீர் வழங்கப்படுகிறது.
நீர் மோர் பந்தலை சேதப்படுத்தினர். குடம், வாளியை உடைத்து எரிந்தனர். ராஜேந்திரன் என்பவரையும் தாக்கினர். இது குறித்து, அ.தி.மு.க., வினர் மடத்துக்குளம் போலீசாரிடம் புகார் அளித்தனர். வழக்கு பதிவுசெய்த போலீசார், நீர் மோர் பந்தலை சேதப்படுத்திய முத்துசாமி, செந்தில், தினேஷ், அருண் ( எ) திருமலை சாமி, பீமராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.