ஈழத்தந்தை செல்வாவின் மகன் யாழ்ப்பாணம் திரும்புகிறார் : குண்டுகளால் துளைக்கப்பட்ட வீட்டை புதுப்பிக்கிறார்
இலங்கை தமிழர்களின் உரிமைக்காக ஆரம்பகாலத்தில் போராடியவர் செல்வநாயகம். இவரால் தொடங்கப்பட்ட பெடரல் கட்சி தமிழர்களுக்கு சம உரிமை கேட்டு பல போராட்டங்களை நடத்தியது.
1947 முதல் 1977 வரை யாழ்ப்பாணத்தில் இவரது வீடு மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட்டது. ஈழ அரசியல் தொடர்பான எந்த முடிவும் இங்குதான் எடுக்கப்பட்டது. இவரது மகன் எஸ்.சி.சந்திரகாசன் ஒரு வழக்கறிஞர். தந்தையின் வழியை பின்பற்றி இவரும் ஈழமக்களூக்காக போராடினார்.
இவரது மனைவி நிர்மலாவும் ஒரு வழக்கறிஞரே. இவர் கொழும்பு சட்ட பல்கலைக்கழகத்தில் பணியாற் றியுள்ளார். இவர்களின் 2 மகன்களூக்கு திருமணமாகி விட்டது.
கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் தெல்லிபல்லை என்ற இடத்திலும் இவர்களுக்கு பூர்வீக வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் குண்டுவீச்சால் சிதிலம் அடைந்து புதர்களாக மண்டிக்கிடக்கின்றன.
இந்த வீட்டை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. 27 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது சந்திரகாசன் இலங்கை செல்ல முடிவெடுத்துள்ளார்.