ராமதாஸுக்கு வேல்முருகன் சவால்
தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது,’’நான் சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக இருந்த போது என்னுடைய பேச்சை அப்பொழுது முதல மைச்சராக இருந்த கருணாநிதி நிமிர்ந்து பார்த்து ரசிப்பார்.
கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்தில் இந்த ஸ்ரீமுஷ்ணம் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு இருப்பதை பார்த்திடும்போது எண்ணற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 2016-ல் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு பாமக ஆட்சியை பிடிக்கும் என ராமதாஸ் தெரிவிக்கிறார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டு 10 இடங்களைப் பிடித்துவிட்டால் நான் ஆரம்பித்த கட்சியை கலைத்து விடுகிறேன். இதை ராமதாஸுக்கு நான் சவாலாகவே விடுகிறேன்’’ என்று தெரிவித்தார்.