சென்னை சவுகார்பேட்டையில் பிளஸ் 2 மாணவனை கடத்தியதாக ஆசிரியை குமுது என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்திருந்த மனு நேற்று மாலை சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.