காமராஜருக்கு பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா: நடிகர் ராமராஜன் பேச்சு
தஞ்சை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டம் தஞ்சை ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் நடந்தது. கூட்டத்திற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் துரை.திருஞானம் தலைமை தாங்கினார்.
முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் கோபால், தஞ்சை தொகுதி இணைச்செயலாளர்கள் எம்.எஸ்.சிங்காரவேலு, பாலை.ரவி, 22-வது வட்ட செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பண்டரிநாதன் வரவேற்றார்.
தமிழ்நாடு பாடநூல் கழக முன்னாள் தலைவர் கு.தங்கமுத்து, வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் தங்கப்பன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவி அமுதாரவிச்சந்திரன், நகரசபை தலைவி சாவித்திரிகோபால் ஆகியோர் பேசினர்.
சிறப்பு விருந்தினராக தலைமை கழக பேச்சாளரும், நடிகருமான ராமராஜன் கலந்து கொண்டு பேசினார்.
கல்விக்கு பெருமை சேர்ந்த காமராஜருக்கு பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா. காமராஜர் மணிமண்டபம், இல்லம் புதுப்பிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி நடத்திய தி.மு.க. இப்படி பெருமை சேர்ந்தது உண்டா? என்பதை காங்கிரஸ் கட்சியினர் உணர்ந்து பார்க்க வேண்டும். இன்னும் 3 மாதத்தில் தமிழகத்தில் மின்தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது’’ என்று பேசினார்.