5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
அரசு தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி இன்று வெளியிட்ட உத்தரவில், ‘’ தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறையின் முன்னாள் கமிஷனர் கே.செல்லமுத்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் நிர்வாக இயக்குனர் அபூர்வ வர்மா மாற்றப்பட்டு, சென்னைக் குடிநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் ஜி.சந்தானம் மாற்றப்பட்டு, கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
வேளாண் விற்பனைத் துறை கமிஷனர் தங்க கலியபெருமாள் மாற்றப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
வருவாய் நிர்வாகத் துறை (நிவாரணம் மற்றும் மறுவாழ்வு) சிறப்பு அதிகாரி எஸ்.கே.பிரபாகர் மாற்றப் பட்டு, தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்’’என்று கூறப்பட்டுள்ளது.