கல்மாடி மீது நடவடிக்கை கிடையாது: ஐஓஏ
இந்திய ஒலிம்பிக் சங்க (ஐஓஏ) முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
கல்மாடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் வலியுறுத்தியபோதும், நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் கூறியுள்ளது.
காமன்வெல்த் ஊழல் வழக்கில் சிக்கிய சுரேஷ் கல்மாடியின் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருடைய விஷயத்தில் ஐஓஏவின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தெரிவிக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு கடிதம் எழுதியது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி).
இதுதொடர்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய ஒலிம்பிக் சங்க செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் (பொறுப்பு) மல்ஹோத்ரா கூறியது: இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவியில் இருந்து கல்மாடி நீக்கப்பட்டிருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை. ஐஓசி எழுதிய 3 கடிதங்களுக்கும் பதில் அனுப்பியுள்ளோம். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
இப்போதைய இந்திய ஒலிம்பிக் சங்கத்தின்வின் பொறுப்புத் தலைவர் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகத் தொடரும் வகையிலும், அவருக்கு அனைத்து அதிகாரங்களையும் அளிக்கும் வகையிலும் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார்.