தொடர் மின்தடையை கண்டித்து தர்ணா போராட்டம்
தொடர் மின்தடையை கண்டித்து பாளையங்கோட்டையில் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
நெல்லை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு சிறு தொழில் சங்கத்தினரும் இணைந்து பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் ஜெயராஜன் தலைமை தாங்கினார். துணைசெயலாளர் சஞ்சய்குணசிங் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
தமிழ்நாட்டில் நிலவிவரும் தொடர் மின்வெட்டை கண்டித்தும், நெல்லை மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படுகிற அறிவிக்கப்படாத மின்தடையால் பொருட்களின் உற்பத்தி 50 சதவீதம் பாதிக்கப்படுகிறது. இதனால் தினமும் ரூ.15 கோடி பாதிப்பு ஏற்படுவதை கண்டித்தும், சீராக மின்சாரம் வழங்கவேண்டும். வங்கிகளின் வட்டிவிகிதம் அதிகரிப்பை கண்டித்தும் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வற்புறுத்தி கோஷங்கள் போட்டனர்.