தொடர் மின்வெட்டைக் கண்டித்து கடையடைப்பு
களக்காட்டில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டைக் கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடந்தது.
களக்காட்டில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் மின்வாரிய அலுவலகத்தின் முன்பு கடந்த 18 ந்தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து, களக்காடு வியாபாரிகள் சங்கம், மக்கள் நலச்சங்கம், விவசாயிகள் சங்கம், முன்னாள் ராணுவத்தினர் சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கம் ஆதரவுடன் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.
களக்காடு பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பேக்கரி, காய்கறி கடைகள் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்படவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கடையடைப்பு போராட்டத்தினால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட் களை வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். நகரின் முக்கிய வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. தொடர்ந்து, சீரான மின்சாரம் வழங்கவில்லை என்றால் தொடர் கடையடைப்பு போராட்டம், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று வியாபாரிகள் சங்க தலைவர் பி.சி.ராஜன் தெரிவித்தார்.