உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் சோனியா குடும்பத்துக்கு பொழுது போக்கு: மாயாவதி கிண்டல்
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் ராகுல் காந்தி, இவரது சகோதரி பிரியங்கா, இவரது கணவர் வதேரா ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர். பிரியங்கா சில இடங்களுக்கு தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்து செல்கிறார். இப்போது சோனியா காந்தியும் களத்தில் இறங்கி இருக்கிறார். உ.பி. தேர்தல் பிரசாரம் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு மிகப்பெரிய பொழுது போக்காக உள்ளது என்று மாயாவதி கிண்டலாக கூறினார்.