கோவையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ’’ரசிகர் மன்றம் வைத்தவர்கள் அதை கட்சியாக்கி தற்போது எதிர் கட்சி தலைவராக உள்ளார்கள். அவர்கள் கட்சி பெயர் கூட வாயில் நுழைவதில்லை,.
தமிழகத்தில் யாருக்குமே ஒன்றும் தெரிவதில்லை. எனவே தான் மாவட்டந்தோறும் சென்று புதிய அரசியல் புதிய நம்பிக்கையை விதைத்து வருகிறோம். வரும் காலத்தில் தேசிய, திராவிட கட்சிகளை புறக்கணித்து சமுதாய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். முன்பு திராவிட கட்சிகளுடன் நாங்கள் வைத்திருந்த கூட்டணி கொள்கையற்ற கூட்டணி’’கூறினார்.