சிறந்த பீல்டிங் அணி: டோனி
இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் டோனி கூறுகையில்,
எப்போதுமே ஜெயிக்கிற அணியில் இடம் வகிப்பது சிறப்பானதாகும். இந்த ஆட்டத்தில் நமது வீரர்களின் பீல்டிங் மிகவும் அற்புதமாக இருந்தது. நான் விளையாடிய ஆட்டங்களில் இது தான் சிறந்த பீல்டிங் அணியாகும். நாம் எப்போதுமே நல்ல தொடக்கத்தை சார்ந்திருக்கிறோம். அந்த வகையில் புதிய பந்தில் பிரவீன்குமார் உண்மையிலேயே அபாரமாக பந்து வீசினார். சரியான இலக்கில் பந்து வீசி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தார். சுழற் பந்து வீச்சாளர்களும் தங்களது பணியை நன்றாக செய்தனர். அதே அளவுக்கு நமது டாப் 3 பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்' என்றார்.