ஈராக் : துணை ஜனாதிபதி அல்-ஹசமிக்கு தூக்கு ஈராக்கில் கடந்த 2003ல் சதாம் உசேனைக் கொன்று, அவரது ஆட்சியை அமெரிக்கப் படைகள் அகற்றிய பிறகு, ஷியா பிரிவைச் சேர்ந்த நூரி அல்-மாலிக் பிரதமராகப் பொறுப்பேற்றார். சன்னி பிரிவைச் சேர்ந்த தாரிக் அல்-ஹசமி துணை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார். ஹசமியின் பாதுகாவலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மூலம் 2005-2011-ம் ஆண்டு வரை ஈராக்கில் 13 நகரங்களிலும் மற்ற நாடுகளிலும் நடத்திய 150 குண்டுவெடிப்புகள் மற்றும் வன்முறைகள் மூலம் ஷியா பிரிவைச் சேர்ந்த 92 பேர் கொல்லப்பட்டனர். 350 பேர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பாக தாரிக் அல்-ஹசமி துருக்கிக்கு நாடு கடத்தப்பட்டார். ஏற்கெனவே ஈராக்கில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில், நேற்று தாரிக் அல்-ஹசமி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பினால் அல்-கொய்தா இயக்கம் எந்நேரமும் ஈராக்கைத் தாக்கலாம் என்றும் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் பலவீனமாக உள்ளது என்றும் பாக்தாத்தில் உள்ள அலி சலீம் என்ற பள்ளி ஆசிரியர் கூறியுள்ளார்.