அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
இந்தியா
‘நான் அப்பாவி’! சொல்கிறார் ஸ்ரீசாந்த்!
......................................
மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு
......................................
ஊழலுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது! ஹசாரே பேச்சு!
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல்
......................................
ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி
......................................
ரஷ்யாவில் நிலநடுக்கம்; 6.0 ஆக பதிவு
......................................
பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலுக்கு தயார்! ஆனந்த் குமார் பேட்டி!
......................................
ரூ. 1.95 லட்சத்திற்கு ஆடைகள்; கேர்ள் பிரண்டுக்கு பிளாக்பெரிசெல்போன் வாங்கிய ஸ்ரீசாந்த்:டெல்லி போலீஸ்
......................................
ஒரே நாளில் ரூ. 1.95 லட்சம் ரொக்கமாக கொடுத்து ஆடைகள் வாங்கினார் ஸ்ரீசாந்த்! போலீசார் தகவல்!
......................................
இருக்கைகளை தேர்வு செய்ய கூடுதல் கட்டணம்! ஏர் இந்தியா நிறுவனம் தகவல்!
......................................
சிகிச்சை அளிக்க மறுத்தால் டாக்டருக்கு ஒரு வருடம் சிறை! மாநில அரசு புதிய சட்டம்!
......................................
ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
......................................
கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! முதல் முறையாக திரையுலகத்தில் இந்தி நடிகர் கைது!
......................................
ராஜீவ் காந்தியின் 22வது நினைவு தினத்தில் தலைவர்கள் அஞ்சலி
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தை குற்ற செயலாக கருதும் வகையில் சட்டம் இருக்க வேண்டும்: கபில் சிபில்
......................................
பலாத்காரம்! பாதிக்கப்பட்ட பெண்ணின் மனித உரிமைகளை மீறிய குற்றம்! சுப்ரீம் கோர்ட் கருத்து!
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 10, செப்டம்பர் 2012 (8:10 IST)

வெண்மைப்புரட்சியின் தந்தை குரியன் மரணம் :ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

 

வெண்மைப்புரட்சியின் தந்தை வர்க்கீஸ் குரியன் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வெண்மைப்புரட்சியின் தந்தை என்ற பெயரைப்பெற்றவர் வர்க்கீஸ் குரியன். உடல் நலக்குறைவால் குஜராத் மாநிலம், ஆனந்த் அருகேயுள்ள நாடியாத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 1921-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பிறந்தவர் குரியன். சென்னை லயோலா கல்லூரியில் படித்து பி.எஸ்சி., பட்டம் பெற்றார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் முதுநிலை பட்டமும் பெற்றார்.

இந்தியாவுக்கு திரும்பி வந்த இவர் குஜராத், ஆனந்த் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பால் பவுடர் ஆலையில் 1949-ம் ஆண்டு மே மாதம் சேர்ந்து பணியாற்றினார்.

பின்னர் அரசுப்பணியை துறந்து விட்டு கூட்டுறவு பால் இயக்கத்தில் சேர்ந்தார். அப்படித்தான் அமுல் உருவானது.
 
இந்தியாவை பால் உற்பத்தியில் தன்னிறைவு காண வைத்ததுடன், உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடாக மாற வழிவகுத்தார்.
 
இந்தியாவின் பால்காரர் என்று செல்லமாக அழைக்கப்பட்டார். மறைந்த குரியனுக்கு மவுலி என்ற மனைவியும், நிர்மலா என்ற மகளும் உள்ளனர்.


குரியனின் மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
அதில் அவர், "வெண்மைப்புரட்சிக்கு வித்திட்டவர் குரியன். அவர் வேளாண்மை, கிராமப்புற முன்னேற்றம், பால் உற்பத்தி துறைகளில் மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளார்'' என புகழாரம் சூட்டி உள்ளார்.

பிரதமர் மன்மோகன்சிங் தனது இரங்கல் செய்தியில், "குரியன் மிகச்சிறப்பான மனிதர். விவசாயப்பொருள் உற்பத்தி, நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு குரியனின் பங்களிப்பு அளவிடமுடியாதது. இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தின், பால் தொழிலின் சின்னமாக திகழ்ந்தவர் குரியன்'' என குறிப்பிட்டுள்ளார்.


குரியனின் இறுதிச்சடங்கு ஆனந்த் நகரில் நேற்று மாலை நடந்தது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :