புதிய கடற்படை தளபதியாக தேவேந்திரகுமார் ஜோஷி பொறுப்பேற்றார்
இந்திய கப்பல் படையின் புதிய கடற்படை தளபதியாக அட்மிரல் தேவேந்திரகுமார் ஜோஷி இன்று (31.08.2012) பொறுப்பேற்றார். அட்மிரல் நிர்மல் வர்மா ஒய்வு பெறுவதை தொடர்ந்து அவ்விடத்திற்கு தேவேந்திரகுமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். தேவேந்திரகுமார் ஜோஷி மேற்கு பிராந்திய கடற்படை கமாண்டராக பதவிவகித்து வந்தார். மேலும் ஜோஷி அந்தமான் நிக்கோபார் தீவுகளில் முப்படைகளின் கமாண்டராக பதவி வகித்துள்ளார்.