ராஜ்தாக்கரே உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி
அசாமில் நடந்த கலவரத்தினை கண்டித்து, மும்பையில் கடந்த 11-ம் தேதி ஆசாத் மைதானத்தில் ஒரு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது வன்முறையாக வெடித்தது. இதில் இருவர் கொல்லப்பட்டனர். 54 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து ஆசாத் மைதானத்தில் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் ஒருபகுதியாக ஜிர்காவும் பகுதியில் இருந்து ஆசாத் மைதானம் வரை அமைதிப்பேரணி நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.