போலிஸ் பாதுகாப்புடன் மாருதி சுசுகியின் மனேசர் தொழிற்சாலை துவக்கம்
மாருதி சுசுகியின் மனேசர் தொழிற்சாலையில் கடந்த மாதம் ஏற்பட்ட மிகப்பெரிய வன்முறைச் சம்பவத்துக்குப் பிறகு இன்று (21.08.2012) பலத்த காவல்துறை பாதுகாப்புடன் தொழிற்சாலையை நிர்வாகம் திறந்துள்ளது. காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை நிரந்தர தொழிலாளர்கள் 300 பேர் மட்டும் இன்று பணியில் ஈடுபடுகின்றனர்.
கடந்த ஜூலை 18ம் தேதி வன்முறைச் சம்பவததில் மேலாளர் ஒருவர் கொல்லப்பட்டார், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். தொழிற்சாலையின் பல பகுதிகள் தீக்கிறையாயின. இதையடுத்து தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 500க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.