தேமுதிக மகளிர் அணி முன்னாள் செயலாளர் திமுகவில் இணைந்தார் திருவள்ளூர் மாவட்ட தே.மு.தி.க. மகளிர் அணி முன்னாள் செயலாளர் ஜி.எஸ்.சங்கீதா சீனிவாசன் தலைமையில் தே.மு.தி.க. கட்சியைச் சேர்ந்த மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் என்.கஸ்தூரி, திருத்தணி நகர மகளிர் அணிச் செயலாளர் எம்.சசிகலா, திருவள்ளூர் நகர மகளிர் அணிச் செயலாளர் எம்.வேளாங்கண்ணி, திருவள்ளூர் நகர ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவர் கே.ஜி.மணி, செயலாளர் எம்.சிவா, பொருளாளர் டி.செல்வம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தே.மு.தி.க. கட்சி நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கலைஞர் முன்னிலையில் 20.08.2012 அன்று தி.மு.கவில் இணைந்தனர்.
அப்போது கனிமொழி, எம்.பி., கழக நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி., அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., முன்னாள் அமைச்சர் ஆ.இராசா,எம்.பி., திருவள்ளூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் மாதவரம் எஸ். சுதர்சனம், முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி, தலைமை நிலையச் செயலாளர் ஆ.த.சதாசிவம், தலைமைக் கழக வழக்கறிஞர் இ.பரந்தாமன் ஆகியோர் உடனிருந்தனர்.