கவுகாத்தி சென்ற ரெயிலில் இருந்து தள்ளப்பட்டதில் பலி 5 ஆக உயர்வு
பெங்களூரில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்தி சென்ற சிறப்பு ரெயிலில், மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி ரெயில் நிலையம் அருகே இரு குழுவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஓடும் ரெயிலில் இருந்து அடித்து கீழே தள்ளப்பட்டதில் 4 பேர் பலியானார்கள். 12 பேர் படுகாயம் அடைந்தனர். திங்கள்கிழமை அந்த பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே மேலும் ஒருவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.