சோனியா, பிரதமர் தலைமையில் தனித்தனியாக கூட்டம்
காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை கலைவதற்காக டெல்-யில் செவ்வாய் கிழமை சோனியா காந்தி தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.
இதேபோல அரசுப் பணிகளில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு பதவி உயர்வில் முன்னுரிமை அளிப்பது தொடர்பாக ஆலோசிப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் செவ்வாய் கிழமை நடைபெறுகிறது.
சோனியா காந்தி மற்றும் பிரதமர் தலைமையில் தனித்தனியே நடக்கும் இரு கூட்டங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.