புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற அனுமதி கேட்டு கடிதம் வரவில்லை: ஜெயந்தி நடராஜன்
புதிய தலைமைச் செயலகத்தை, மருத்துவமனையாக மாற்றுவதற்கு அனுமதி கேட்டு, எந்த கடிதமும் வரவில்லை,'' என, மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.
சென்னை, சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி கிடைக்காததால், தமிழகத்தில் சில திட்டங்கள், முடங்கிக் கிடப்பதாகக் கூறுவது முற்றிலும் தவறானது.
நிலக்கரி தோண்டும் போது, வனத்துறை அனுமதி வேண்டும். அனல் மின் நிலையம், இரும்பாலை, சிமென்ட் ஆலை போன்ற தொழிற்சாலைக்கும் சுற்றுச்சூழல் அனுமதி தேவை என்றார்.
கேள்வி: புதிய தலைமை செயலகத்தை ஆஸ்பத்திரியாக மாற்றுவது தொடர்பாக உங்கள் துறைக்கு கடிதம் ஏதும் அனுப்பப்பட்டதா?
பதில்: அப்படி எந்த கடிதமும் வரவில்லை.
கே.முன்னாள் மத்திய மந்திரி இளங்கோவன் உங்களையும், மேலும் ஒரு மத்திய மந்திரியையும் விமர்சித்து பேசி உள்ளாரே?
பதில்: உட்கட்சி விவகாரத்தை மீடியாக்களில் பேசுவது எனது அரசியல் பாரம்பரியத்தில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.