அசாமில் வன்முறை பாதித்த இடங்களை மத்திய குழு பார்வையிடுகிறது
அசாம் மாநிலத்தின் கோக்ராஜர், தூப்ரி, சிராங் மற்றும் பக்சா ஆகிய மாவட்டங்களில் போடோ இன பழங்குடியினர் மற்றும் புலம்பெயர்ந்த வங்காள தேசத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 76 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இந்த வன்முறையை அடுத்து மாநிலத்தில் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், வன்முறை பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய அரசின் இணை செயலாளர்கள் அடங்கிய 6 பேர் கொண்ட குழு நாளை (21.08.2012) சென்று பார்வையிடுகிறார்கள். அங்கு வன்முறையால் பாதிப்படைந்த மக்களை சந்தித்து அவர்கள் தேவைகளை கேட்டறிகின்றனர்