கூட்டணியை பலப்படுத்த சோனியா தீவிரம்: டெல்லியில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாளை (21.08.2012) டெல்லியில் நடைபெறுகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கியத் தூணாக விளங்கிய பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகிவிட்ட சூழ்நிலையில், கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே ஒரு இணக்கமான சூழ்நிலை இல்லை என்று கூறப்படுகிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் பிரச்சனை, நாடு முழுவதும் உள்ள வடகிழக்கு மாநிலத்தவர்கள் இடம்பெயருவது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.