அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
இந்தியா
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 19, ஆகஸ்ட் 2012 (23:22 IST)



வடகிழக்கு மாநில மக்கள் வெளியேறுவது குறைந்துள்ளது: கர்நாடக துணை முதல்வர்

வடகிழககு மாநில மக்கள் கர்நாடகத்திலிருந்து வெளியேறுவது குறைந்துள்ளது என்று கர்நாடக துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான ஆர். அசோக் தெரிவித்தார்.


பெங்களூரில் நாகலாந்து மின்சாரத்துறை அமைச்சர் சீமா மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் சோட்டாசி ஆகியோர் ஆர்.அசோக்கை அவரது இல்லத்தில் சந்தித்து வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர். அசோக் கூறியதாவது: 


வடகிழக்கு மாநில மக்களுக்கு பெங்களூரில் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிரண்டு சிறிய தாக்குதல் சம்பவங்களை தவிர வேறு அசம்பாவிதங்கள் நடக்கவில்லை. மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதையடுத்து தங்கள் சொந்து ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மேலும் வடகிழக்கு மாநில மக்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அம்மக்களை மிரட்டியதாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பதனை யாரும் மறந்துவிடக்கூடாது.


வீண் வதந்திகளை பரப்புபவர்கள் மீது போலீஸில் பொதுமக்கள் புகார் அளிக்க முன்வர வேண்டும். குறுஞ்செய்தி மூலம் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :